திருச்சி எம்.ஐ.இ.டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தன்னார்வ ரத்ததான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் தலைவர் அ.முகமமது யூனூஸ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜே.அந்தோணிராஜ் முன்னிலை வகித்தார்.
முகாமில் திருச்சி அரசு மருத்துவமனையின் ரத்த வங்கி மருத்துவ அலுவலர் புவனேசுவரி தலைமையிலான மருத்துவக் குழுவினர் ரத்த சேகரிப்பு பணியை செய்தார்கள். முகாமினை எம்.ஐ.இ.டி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டமும், திருச்சி அரசு மருத்துவமனையும் இணைந்து நடத்தினர்கள். ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள்,மாணவர்கள் செய்திருந்தனர்.