சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட இளைஞர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றங்கரையில் பகுதியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஸ்ரீரங்கம் இந்திரா நகரைச் சேர்ந்த ரெ. பாலா (எ) பாலகிருஷ்ணன் (23) உள்ளிட்ட சிலரை ஸ்ரீரங்கம் மகளிர் போலீஸார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.
இதில், பாலகிருஷ்ணன் என்பவர் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளது உறுதியானதை தொடர்ந்து அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸார் பரிந்துரைத்தனர். அதன் பேரில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல் ஆணையர் அ. அமல்ராஜ் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
இதனையடுத்து பாலகிருஷ்ணனை தண்டணைக் கைதிகள் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.