அந்தோணியார் ஆலயத்தில் பொங்கல் விழா

திருச்சி மார்சிங்பேட்டையில் உள்ள அர்ச். அந்தோணியார் ஆலயத்தில் பொங்கல் விழா  வியாழக்கிழமை நடைபெற்றது.

திருச்சி மார்சிங்பேட்டையில் உள்ள அர்ச். அந்தோணியார் ஆலயத்தில் பொங்கல் விழா  வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை 6.30 மணிக்கு திருப்பலி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு பொங்கல் விழா தொடங்கியது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற சர்ச் வளாகத்தின் வெளியே பொங்கல் பானையில் பொங்கல் வைத்தனர். பின்னர், சமைத்த பொங்கலை ஆலயத்தில் உள்ள அந்தோணியாருக்கு படையிலிட்டனர். 
கோயில் நிர்வாகம் சார்பிலும் பொங்கல் வைக்கப்பட்டது. பக்தர்கள் கொண்டு வந்த பொங்கலை அந்தோணியர் முன்பு வைக்கப்பட்டு பங்குதந்தை தலைமையில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர், பொதுமக்களிடம் அவரவர் பொங்கல் பானைகள் திரும்ப வழங்கப்பட்டன. ஆலயத்தில் வைக்கப்பட்ட பொங்கலை பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்று குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினருக்கும் அளித்தனர். ஏற்பாடுகளை கோயில் விழாக் கமிட்டியினரும், ஊர்ப் பொதுமக்களும் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com