திருச்சி
மணப்பாறை நாகநாத சுவாமி கோயிலில் வலம்புரி சங்கு வழிபாட்டு வேள்வி
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருள்மிகு மாதுளாம்பிகை உடனுறை நாகநாத சுவாமி திருக்கோயிலில் தைமுழு
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருள்மிகு மாதுளாம்பிகை உடனுறை நாகநாத சுவாமி திருக்கோயிலில் தைமுழு நிலவையொட்டி வலம்புரிசங்கு வழிபாட்டு வேள்வி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சங்கல்பம், மூலவரிடன் அனுக்ஞை, பஞ்சகவ்யப் பூஜை, கலசபூஜை, 108 வலம்புரிச் சங்கு பூஜை, ஹோமம், திரவியாஹுதிக்குப் பின்னர், நாகநாதசுவாமி, மாதுளாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து உற்ஸவமூர்த்திகள் கோயிலில் உள்சுற்று உலா வந்து காட்சியளித்தனர். ஏராளமானோர் நிகழ்வில் பங்கேற்றனர்.