திமுக ஊராட்சி சபை கூட்டம்
By DIN | Published On : 29th January 2019 04:12 AM | Last Updated : 29th January 2019 04:12 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டம் முசிறிஅருகே திமுக ஊராட்சி சபை கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தா.பேட்டை ஊராட்சி ஒன்றியம் முத்தம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற திமுக கிராம சபை கூட்டத்திற்கு முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும் மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு தலைமை வகித்து அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்து சிறப்புரையாற்றினார். நிகழ்வில், வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.