திருவானைக்கா அருகே ஞாயிற்றுக்கிழமை இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக,
10 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவானைக்கா அருகிலுள்ள திம்மராயசமுத்திரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (29). இவர் ஞாயிற்றுக்கிழமை மாலை அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த போது, நடுக்கொண்டையம்பேட்டையைச் சேர்ந்த அசோக் (32) மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது.
தகவலறிந்து அங்கு வந்த இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீரங்கம் போலீஸார் அப்பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து இருதரப்பைச் சேர்ந்த சுரேஷ், ,அஜய்மணி, அசோக், சூர்யா, ஸ்ரீராம், விஜய்கார்த்தி, விக்னேஷ், பிரசாத், ரவிக்குமார், வசந்த ஆகிய 10 பேரையும் ஸ்ரீரங்கம் போலீஸார் கைது செய்தனர். இதில் விக்னேஷ், மணிகண்டன் ஆகிய இருவரும் காயமடைந்து ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.