ஸ்ரீரங்கம் கோயிலில் ஆண்டு புது கணக்குத் தொடக்கம்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நிகழ் ஆண்டுக்கான (பசலி ஆண்டு) புது கணக்குத் தொடக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நிகழ் ஆண்டுக்கான (பசலி ஆண்டு) புது கணக்குத் தொடக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கோயில் இணை ஆணையர் பொன். ஜெயராமன் புது 
கணக்கு பூஜையைத் தொடக்கி வைத்தார். கோயில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் முதல் காணிக்கையை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் நம்பெருமாளுக்கு காணிக்கையை அளித்து ரசீது பெற்றனர்.  இக்கோயிலில் ஆண்டுதோறும் நம்பெருமாளுக்கு புது கணக்குத் தொடங்கப்படுவது வழக்கம். இந்நிகழ்வில், கோயில் அறங்காவலர்கள் டாக்டர் சீனிவாசன், கவிதா ஜகதீசன்  மற்றும் கோயில் அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com