ஸ்ரீரங்கம் பகுதிகளில் இனி  காலை நேரம் மட்டும் குடிநீர்

மாநகராட்சி ஸ்ரீரங்கம் பகுதியில் 1 முதல் 6 வார்டுகள் வரையில் வியாழக்கிழமை முதல் காலை நேரம் மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படவுள்ளது.

மாநகராட்சி ஸ்ரீரங்கம் பகுதியில் 1 முதல் 6 வார்டுகள் வரையில் வியாழக்கிழமை முதல் காலை நேரம் மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து திருச்சி மாநகராட்சி அலுவலக செய்திக்குறிப்பு ; திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்கா பகுதிகளில்  நாள்தோறும்  காலை மற்றும் மாலை நேரங்களில் சீரான குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.  
தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீர் சிக்கனத்தின் அவசியம் கருதி, ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்கா பகுதிகளில் வார்டு எண்1 முதல் 6 வரை உள்ள பகுதிகளுக்கு,  ஜூலை 4 ஆம் தேதி வியாழக்கிழமை முதல் காலை நேரம் மட்டும் குடிநீர் விநியோகிக்கப்படும். 
மாலை நேர குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே இதனால் ஏற்படும்  சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com