பெல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

உற்பத்தி ஊக்கத் தொகை வழங்கக்கோரி பெல் தொழிலாளர் சங்கக் கூட்டமைப்பு புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

உற்பத்தி ஊக்கத் தொகை வழங்கக்கோரி பெல் தொழிலாளர் சங்கக் கூட்டமைப்பு புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
பெல் நிறுவன நுழைவு வாயில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பெல் தொமுச தொழிற்சங்க பொதுச் செயலரும் கூட்டுக் குழு ஒருங்கிணைப்பாளருமான தீபன் தலைமை வகித்தார். போராட்டத்தில் தொமுச, அம்பேத்கர் யூனியன், அண்ணா தொழிற்சங்கம், பிஎம் எஸ், சிஐடியு டிடிஎஸ் மற்றும் ஏஜடியுசி தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பெல் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பெல் நிர்வாகம் உற்பத்தி ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்றும் அதற்குரிய தேதியை அறிவிக்க வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பினர்.  கோரிக்கை நிறைவேற்றப்படாவிடில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com