முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி
By DIN | Published On : 30th July 2019 09:57 AM | Last Updated : 30th July 2019 09:57 AM | அ+அ அ- |

துறையூர் நகரில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
கண்ணனூரிலுள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், துறையூர் நகரில் நடைபெற்ற பேரணியை முசிறி காவல் துணைக் கண்காணிப்பாளர் தமிழ்மாறன் தொடக்கி வைத்தார்.
பேரணியில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்று மழைநீர் சேகரித்தல், மரம் நடுதல் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பிச் சென்றனர். துறையூர் பாலக்கரையில் தொடங்கிய பேரணி முசிறி பிரிவுச் சாலை அருகே நிறைவடைந்தது.