லாட்டரி, மது விற்ற இருவர் கைது

முசிறி பகுதியில் லாட்டரி மற்றும் மதுபானங்கள் விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

முசிறி பகுதியில் லாட்டரி மற்றும் மதுபானங்கள் விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.
முசிறி பரிசல்துறை சாலையில் போஸீஸார் திங்கள்கிழமை ரோந்து சென்றனர். அப்போது,  அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரிகளை விற்றுக் கொண்டிருந்த புதுகள்ளத் தெருவைச் சேர்ந்த ரா. செல்வத்தை (62) முசிறி போலீஸார் கைது செய்தனர்.
இதுபோல, தும்பலம் பகுதியில் மதுபானங்கள் திருட்டுத்தனமாக விற்கப்படுவதாக முசிறி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில்  அங்கு சென்ற போலீஸார், தும்பலம் டாஸ்மாக் கடை அருகே  மது விற்ற அ. கண்ணனை கைது செய்து, 17 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com