திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வாகைக் குளக் கரையில் கொட்டப்பட்ட குப்பைகளில் புதன்கிழமை தீடீர் தீப்பிடித்தது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீயை அணைத்தனர்.
மணப்பாறை அடுத்த அண்ணா நகர் பகுதி அருகே அமைந்துள்ளது வாகைக்குளம். இக்குளக்கரையில் அப்பகுதி பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதால் அப்பகுதி அங்கீகரிக்கப்படாத குப்பைக்கிடங்காகவே மாறி வருகிறது. குப்பைகளை அகற்றுவதில் நகராட்சியும், ஊராட்சியும் மெத்தனம் காட்டி வருகிறது. இந்நிலையில் அவ்வப்போது குப்பைகளில் தீப்பற்றி கொள்வதும், அதிலிருந்து வரும் புகை அப்பகுதி பொதுமக்களுக்கு இன்னல்களை தருவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை இரவு குப்பைகளில் ஏற்பட்ட தீ குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீயை அணைத்தனர்.