மணப்பாறை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் செயல்பட்டும் வர்த்தக நிறுவனங்கள் நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தினாலோ, இருப்பு வைத்திருந்தாலோ அபராதம் விதிக்கப்பட்டு நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மணப்பாறை நகராட்சிப் பகுதியில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருள்களைச் சேமித்து வைத்தல், கொண்டு செல்லுதல், விற்பனை செய்தல், பகிர்ந்தளித்தல் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே நெகிழிப் பொருள்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்யாமல், வர்த்தக நிறுவனங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதையும் மீறி மொத்த, சில்லறை விற்பனையாளர்கள் நெகிழிப் பொருள்களை சேமித்து, விற்பனை செய்தால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
மேலும், வர்த்தக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் என். ஸ்ரீதேவி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.