பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு

திருச்சியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். 

திருச்சியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். 
திருச்சி விமானநிலையம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன்(32). இவரது மனைவி ருத்ரா(26). இவர் செவ்வாய்க்கிழமை தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதையறிந்த மர்ம நபர் வீட்டுக்குள் வந்து ருத்ரா இருக்கும் அறைக்கு சென்று அவர் அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிவிட்டார். இதுகுறித்து ருத்ரா கொடுத்த புகாரின் பேரில் விமானநிலைய போலீஸார் வழக்குப் பதிந்து  மர்ம நபரை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com