போதையில் தவறி விழுந்த ஆட்டோ ஒட்டுநர் சாவு
By DIN | Published On : 14th June 2019 10:10 AM | Last Updated : 14th June 2019 10:10 AM | அ+அ அ- |

திருச்சி அருகே குடிபோதையில் தவறி விழுந்த ஆட்டோ ஒட்டுநர் உயிரிழந்தார்.
திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ரொசாரியோ (38). ஆட்டோ ஒட்டுநரான இவர் தனது மனைவி தெரசாவுடன் நாகமங்கலம் மலர் நகரில் உள்ள மாமனார் வீட்டில் வசித்து வந்தார். குடிபோதைக்கு அடிமையான இவர் ஆட்டோ சவாரிக்கு செல்வதில்லையாம்.
இந்நிலையில் வியாழக்கிழமை வீட்டில் இருந்து வெளியே வந்த ரொசாரியோ மயங்கி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது. மணிகண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.