மாடிப் படியிலிருந்து தவறி விழுந்த எலெக்ட்ரீசியன் பலி
By DIN | Published On : 18th June 2019 08:38 AM | Last Updated : 18th June 2019 08:38 AM | அ+அ அ- |

திருச்சியில் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்த எலெக்ட்ரீசியன் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
திருச்சி சிந்தாமணி பஜாரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (46). எலெக்ட்ரீசியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை போதையில் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்த இவர், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து கோட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.