திருச்சி: தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் சார்பில், திருச்சி, முசிறி, லால்குடி கல்வி மாவட்டங்களில் பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்களுக்கான பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் சங்க திருச்சி மாவட்டத் தலைவர் பக்கிரிசாமி தலைமை வகித்தார்.
தேவகோட்டை கல்வி மாவட்ட அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, திருச்சி கல்வி மாவட்ட அலுவலர் சின்னராசு, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பீட்டர்ராஜா, மாநிலப் பொதுச் செயலர் ராஜூ, மாநிலப் பொருளாளர் அன்பரசன், மாநில அமைப்புச் செயலர் இளங்கோ, மாவட்டச் செயலர் அழகிரிசாமி, மாவட்ட முன்னாள் பொதுச்செயலர் அருள் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
விழாவில், அண்மையில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் பெருமாள், ஜெகதா, திலகவதி, சுப்பையா, சீனிவாசன், அங்கமுத்து, சாரதாமணி, விஜயரெங்கன், எஸ்தர், சகாய ரெஜினா, நிர்மலா, மணிமேகலை, புளோராமேரி, மரிய ஜோசப் ஆகிய, 14 பேருக்கும் கௌரவிக்கப்பட்டனர். மேலும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.