திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வழக்குரைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது காவல்நிலையத்தில் சனிக்கிழமை வழக்கு பதியப்பட்டுள்ளது.
மணப்பாறை அடுத்த வேங்கைக்குறிச்சி கிராமம் பொம்மம்பட்டியை சேர்ந்தவர் பாலகுரு மகன் பி. பாண்டி, வழக்குரைஞர். கடந்த 2 ஆண்டுகளாக இவர் திரைப்பட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு துறையூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.1-ல் காசோலை தொடர்ப்பான வழக்கு நடத்தி வந்தாராம். இது தொடர்பாக வழக்கு செலவுத்தொகை எதுவுமே இவருக்குக் கொடுக்கவில்லையாம். இதுகுறித்து வழக்குரைஞர் பாண்டி சீனிவாசனுக்கு செல்லிடப்பேசி மூலம் கேட்டபோது அவர் தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து மணப்பாறை காவல் நிலையத்தில் கடந்த மே மாதம் வழக்குரைஞர் புகார் அளித்திருந்தார்.