திருச்சி ஜமால்முகமது கல்லூரியில் மிலாதுநபி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, கல்லூரி முதல்வர் இஸ்மாயில் முகைதீன் தலைமை வகித்தார். தாளாளர் காஜா நஜீமுதீன், துணைச் செயலர் அப்துல் சமது, விடுதிகள் இயக்குநர் பாஜில், கூடுதல் துணை முதல்வர் சஹாபுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ஜமால் முகமது வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்வில், இஸ்லாம் டைரி மாத இதழ் ஆசிரியர் மவ்லவி காஜா முகைதீன் கலந்து கொண்டு நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை விளக்கிப் பேசினார். வணிகவியல் பேராசிரியர் விஜயகுமார், துறை ஒருங்கிணைப்பாளர் அப்துல் காதிர், அறக்கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜோசப் ஜெரால்டு ஆகியோர் கலந்து கொண்டனர்.