பொள்ளாச்சியில் நடந்த மகளிர் பாலியல் சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாநிலத் தலைவர் த. பானுமதி தலைமை வகித்தார். பொள்ளாச்சி மகளிர் பாலியல் சம்பவம் தொடர்பாக, பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளவேண்டும்.
தொடர்புடைய நபர்கள் அனைவரையும் கைது செய்வதுடன், விசாரணையின் போது கிடைக்கும் விவரங்களை தொடர்புடைய மகளிர் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ரகசியம் காக்கப்பட வேண்டும். மேலும் சமூக வலைதளங்களில் பரவும் சம்பவங்கள் தொடர்பான காட்சிகள் தடைசெய்யப்பட வேண்டும் என்பன உள்னிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.