திருச்சி, அரியமங்கலம் அண்ணாநகர், இந்திராகாந்தி தெருவைச் சேர்ந்தவர் இருதயராஜ் மகன் ஜோசப்மைக்கேல்ராஜ் (21). இவர் காட்டூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கணினி அறிவியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு அரியமங்கலம் பகுதியில் தண்டவாளத்தைக் கடந்தபோது, அவ்வழியே சென்ற ரயில் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.