விமானநிலையத்தில்  ரூ.8.72 லட்சம் தங்க நகைகள் பறிமுதல்

சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.8.72 லட்சம் மதிப்பிலான 283 கிராம் தங்க நகைகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.8.72 லட்சம் மதிப்பிலான 283 கிராம் தங்க நகைகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த இண்டிகோ விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது,  ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை சேர்ந்த லலிதாகுமாரி என்ற பெண் தனது உடைமைகளில்  ரூ.8. 72 லட்சம் மதிப்புள்ள 283 கிராம் தங்க நகைகளை  மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது.  இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com