மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பழூரைச் சேர்ந்த 4 பேர் கள்ளச் சாராய தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சனிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பழூர் அரிஜன தெருவைச் சேர்ந்த ராஜசேகர்(29), பிரசாத்(20), ராஜ்குமார்(36), மணிகண்டன்(26) ஆகிய 4 பேரும் தொடர்ந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் 4 பேரையும்
கள்ளச்சாராய குற்றதடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு உத்தரவிட்டதின் பேரில் நான்கு பேரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.