தங்கக் கருட வாகனத்தில் நம்பெருமாள் சேவை: மார்ச் 22-இல் தேரோட்டம்

 ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் வரும் 23-ஆம் தேதிவரை நடைபெறும் பங்குனித் தேர்த் திருவிழாவின் 4-ஆம் நாளான சனிக்கிழமை முக்கிய நிகழ்வான  தங்கக் கருட சேவை நடைபெற்றது.


 ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் வரும் 23-ஆம் தேதிவரை நடைபெறும் பங்குனித் தேர்த் திருவிழாவின் 4-ஆம் நாளான சனிக்கிழமை முக்கிய நிகழ்வான  தங்கக் கருட சேவை நடைபெற்றது.
விழாவையொட்டி நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து காலை 7.30-க்கு புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து 9.30-க்கு ரெங்க விலாச மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார். மாலை 6.30-க்கு தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்த நம்பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். பின்னர் இரவு 8.30-க்கு வாகன மண்டபத்தை அடைந்த நம்பெருமாள் 9 மணிக்கு புறப்பட்டு 9.30-க்கு கண்ணாடி அறை சென்றடைந்தார். வரும் 22 ஆம் தேதி பங்குனித் தேரோட்டம் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன். ஜெயராமன் மற்றும் அற ங்காவலர் குழுவினர் செய்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com