துறையூர் அருகே வீட்டின் பின்பகுதியில் தீப்பிடித்து மரச்சாமான்கள் நாசமாயின.
கீரம்பூரைச் சேர்ந்த பி. கிருஷ்ணசாமி தனது வீட்டின் பின்புற தாழ்வாரத்தின் கீழ் பழைய மரச்சாமான்களை வைத்திருந்தார்.
இந்நிலையில் சனிக்கிழமை மதியம் மின் கசிவால் வீட்டின் பின்பகுதியில் தீப்பிடித்ததால் அந்த மரச் சாமான்கள் எரிந்தன.
தகவலறிந்த துறையூர் தீயணைப்பு நிலைய அலுவலர் நாகராஜன் தலைமையிலான வீரர்கள் சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் மரச்சாமான்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன.