பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய பேருந்துநிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மாவட்ட தலைவர் இப்ராஹிம் தலைமை வகித்தார்.
இதில், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், மாதர் சங்கம் மற்றும் தன்னார்வ பொதுநல அமைப்புகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.
இதே போல சிந்தாமணி அண்ணாசிலை அருகிலும் பொது நல அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.