திருச்சி மாநகராட்சியின் வரி வசூல் சேவை மையங்களில் அனைத்து விடுமுறை நாள்களிலும் வரிகளுக்கான கட்டணத்தை செலுத்தலாம் என ஆணையர் ந. ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி மாநகராட்சிக்கு வரி செலுத்துபவர்கள் அனைவரும் சொத்துவரி, குடிநீர் கட்டணம், காலிமனை வரி, தொழில்வரி மற்றும் மாநகராட்சி கடை வாடகை, புதைவடிகால் சேவைக்கட்டணம் ஆகியவைகளின் நிலுவை மற்றும் நடப்புக் கட்டணத்தை செலுத்த தீவிர வரிவசூல் முகாம் நடத்தப்பட்டது.
2018-19ஆம் ஆண்டுக்கான வரியினங்களை செலுத்த மாநகராட்சியில் உள்ள 27 வசூல் மையங்களில் காலை 9 மணிமுதல் 5 மணிவரை கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இணையதளம் மூலமும் வரிகளை செலுத்தலாம். விடுமுறை நாள்களிலும் கட்டணம் செலுத்துவதற்கு எதுவாக அனைத்து வசூல் மையங்களும் விடுமுறை நாளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.