திருச்சி
மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு
தொட்டியம் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
தொட்டியம் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
தொட்டியம் வட்டம், கொளக்குடியை அடுத்த அம்மன்குடியைச் சேர்ந்த சக்திவேல் மகன் மணிகண்டன் (25). இவர், பாப்பாப்பட்டியிலுள்ள கல் உடைக்கும் கிரஷரில் பணியாற்றி வந்தார். ஞாயிற்றுக்கிழமை கிரஷரிலுள்ள இயந்திரத்தை இயக்குவதற்காக சுவிட்சை அழுத்திய போது, மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே மணிகண்டன் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த தொட்டியம் போலீஸார் மணிகண்டனின் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.