திருவெறும்பூர் அருகே கிளியூர் கல்லணை கால்வாய் ஆற்றில் மணல் அள்ளிய 4 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள கிளியூர் கல்லணை கால்வாய் ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதாக திருவெறும்பூர் போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் ஆய்வாளர் மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு சென்றார். அங்கு லாரியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (24) ராஜசேகரன் (29) பாலமுருகன் (25) சண்முகராஜ் (38)ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மணல் அள்ள பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.