திருச்சி மாவட்டம், முசிறி அருகே சேந்தமாங்குடியில் சட்டவிரோதமாக அரசு மது விற்பதாக முசிறி போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் புதன்கிழமை இரவு சம்பந்தப்பட்ட பகுதியில் ரோந்து சென்றபோது அப்பகுதியில் ஒரு வீட்டில் சேந்தாமாங்குடியைச் சேர்ந்த சிவா (34) என்பவர் மது விற்பதைக் கண்டறிந்து அவரைக் கைது செய்து 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.