மூதாட்டி சடலம் மீட்பு

உப்பிலியபுரம் அருகே தற்கொலை செய்து கொண்ட மூதாட்டியின் சடலத்தை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைப்பற்றினர்.

உப்பிலியபுரம் அருகே தற்கொலை செய்து கொண்ட மூதாட்டியின் சடலத்தை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைப்பற்றினர்.
துறையூர் வட்டம்,  வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்த பம்பையன் மனைவி தங்காள் (67). தனது  இளைய மகன் பெருமாள் வீட்டில் தங்கியிருந்தார். 
உடல் நலமின்றி இருந்த இவர் ஏப்.26 ஆம் தேதி முதல் காணவில்லை.  இந்த நிலையில், வெங்கடாசலபுரத்தில் சின்னமலை காட்டுப்பகுதியில் தங்காள் சேலையால் தூக்கிட்டு சடலமாகக் கிடப்பதாக  போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. இதன் பேரில், அங்கு சென்ற உப்பிலியபுரம் போலீசார் தங்காளின் சடலத்தை கைப்பற்றினர். மேலும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com