வையம்பட்டி அருகே மூதாட்டியிடம் நகையைப் பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
வையம்பட்டி அருகிலுள்ள துலுக்கம்பட்டியைச் சேர்ந்த வீராசாமி மனைவி லட்சுமி (75). செவ்வாய்க்கிழமை மாலை வீட்டு வாசலில் அமர்ந்திருந்த லட்சுமியிடம், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 2 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து வையம்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.