விடுதியில் இறந்து கிடந்த ரயில்வே தொழிலாளி சடலம் மீட்பு
By DIN | Published On : 16th May 2019 08:50 AM | Last Updated : 16th May 2019 08:50 AM | அ+அ அ- |

திருச்சி ஜாபர்ஷா தெருவிலுள்ள விடுதியில் இறந்து கிடந்த ரயில்வே தொழிலாளி சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
ஜாபர்ஷா தெருவிலுள்ள விடுதியில் தங்கியிருந்த ஒருவரது அறை நீண்ட நேரமாகியும் செவ்வாய்க்கிழமை திறக்கப்படவில்லை. இதையடுத்து தகவலின் பேரில் கோட்டை போலீஸார் அங்கு சென்று, அறையின் கதவை உடைத்து பார்த்த போது, இறந்தவர் டிபன் சாப்பிட்ட நிலையில் கிடந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர், சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த ரயில்வே தொழிலாளி சார்லஸ் ஜெயராஜ் (35) என்பதும், கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரியாவை பிரிந்து வாழ்ந்து விவகாரத்துக்கு விண்ணப்பித்திருந்ததும் தெரிய வந்தது. மாரடைப்பு காரணமாக சார்லஸ் ஜெயராஜ் இறந்திருக்கலாம் எனக் கருதி, கோட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.