முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
குடிநீர் கேட்டு புளியஞ்சோலையில் சாலை மறியல்
By DIN | Published On : 18th May 2019 09:05 AM | Last Updated : 18th May 2019 09:05 AM | அ+அ அ- |

துறையூர் அருகே புளியஞ்சோலை செல்லும் சாலையில் குடிநீர் வழங்கக் கோரி காலிக்குடங்களுடன் வெள்ளிக்கிழமை மறியல் செய்தனர்.
உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த காமாட்சிபுரத்தில் கடந்த 20 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. குடிநீரை முறையாக வழங்கக் கோரி அந்தக் கிராமத்தினர் சார்பில் விடுக்கப்பட்டகோரிக்கையை காமாட்சிபுரம் ஊராட்சி, உப்பிலியபுரம் ஒன்றிய நிர்வாகம் கண்டு கொள்ளவில்லையாம். இதனால் அதிருப்தியடைந்த அந்தக் கிராமத்தினர் துறையூரிலிருந்து புளியஞ்சோலை செல்லும் சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் செய்தனர். தகவலறிந்து வந்த வட்டார வளாச்சி அலுவலர் ரேவதி தலைமையிலான உப்பிலியபுரம் ஒன்றிய அலுவலக அதிகாரிகள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.