வீடு புகுந்து இருவருக்கு அரிவாள் வெட்டு; பெண் கடத்தல்

மணப்பாறை அருகே மர்ம நபர்கள் வீடு புகுந்து இருவரை வெட்டி நகை  பறித்து இளம் பெண்ணைக் கடத்திச் சென்றனர்.

மணப்பாறை அருகே மர்ம நபர்கள் வீடு புகுந்து இருவரை வெட்டி நகை  பறித்து இளம் பெண்ணைக் கடத்திச் சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை அடுத்த தேங்காய்தின்னிப்பட்டியைச் சேர்ந்தவர் அம்மாசி மகன் ரமேஷ் (39). தனியார் நிதி நிறுவன ஊழியரான இவர் ஜோதி (36), கனகவள்ளி (28) ஆகிய இரு மனைவிகளுடன்  மணப்பாறையை அடுத்த பெஸ்டோ நகரில் வாடகை  வீட்டில் வசித்து வருகிறார். 
இந்நிலையில் இவரின் 2-ஆவது  மனைவியான கனகவள்ளியின் தோழி தஞ்சாவூரை சேர்ந்த அபிராமி அவர்களது வீட்டுக்கு வந்துள்ளார். 
வெள்ளிக்கிழமை பிற்பகல் அனைவரும் வீட்டில் இருந்த நிலையில், அங்கு கருப்பு நிற காரில் வந்த அடையாளம் தெரியாத 4 பேர் ரமேஷின் வீடு புகுந்து அங்கிருந்த ரமேஷ் மற்றும் அவரது முதல் மனைவி ஜோதி ஆகியோரை அரிவாளால் வெட்டி, ஜோதி அணிந்திருந்த 5 பவுன் செயின் மற்றும் செல்லிடபேசிகளை பறித்துள்ளனர். அவர்களின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வர, விருந்துக்கு வந்திருந்த அபிராமி என்ற இளம்பெண்ணை அவர்கள் காரில் கடத்திச் சென்று விட்டனராம்.
தகவலறிந்து வந்த மணப்பாறை காவல் உதவி ஆய்வாளர் ராமன் மற்றும் போலீஸார் காயமடைந்த ரமேஷ், ஜோதியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com