திருச்சி - பொன்மலை இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மே28, ஜூன் 4 ஆகிய தேதிகளில் அந்த வழித்தடத்தில் ரயில்சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி-பொன்மலை இடையே மே28 (செவ்வாய்க்கிழமை) மற்றும் ஜூன் 4இல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் குருவாயூர்-சென்னை விரைவு ரயில் (வண்டி எண்.16128) விழுப்புரம் ரயில்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு அங்கிருந்து 50 நிமிடம் தாமதமாக புறப்படும். அதே போல், திருச்சி-திருப்பாதிரிபுலியூர் பயணிகள் ரயில் (வண்டி எண்.76842) வழக்கமாக இயக்கப்படும் வழித்தடத்தில் 30 நிமிடம் கட்டுப்படுத்தப்பட்டு மெதுவாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.