பராமரிப்பு பணி:  மே28, ஜூன் 4-இல் ரயில் சேவையில் மாற்றம்

திருச்சி - பொன்மலை இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மே28, ஜூன் 4 ஆகிய தேதிகளில்

திருச்சி - பொன்மலை இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மே28, ஜூன் 4 ஆகிய தேதிகளில் அந்த வழித்தடத்தில் ரயில்சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
திருச்சி-பொன்மலை இடையே மே28 (செவ்வாய்க்கிழமை) மற்றும் ஜூன் 4இல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் குருவாயூர்-சென்னை விரைவு ரயில் (வண்டி எண்.16128) விழுப்புரம் ரயில்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு அங்கிருந்து 50 நிமிடம் தாமதமாக புறப்படும். அதே போல்,  திருச்சி-திருப்பாதிரிபுலியூர் பயணிகள் ரயில் (வண்டி எண்.76842) வழக்கமாக இயக்கப்படும் வழித்தடத்தில் 30 நிமிடம் கட்டுப்படுத்தப்பட்டு மெதுவாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com