திருச்சி மாநகராட்சி ஆணையா் ந. ரவிச்சந்திரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து புதிய ஆணையராக எஸ். சிவசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
திருச்சி மாநகராட்சியை தூய்மை நகரப் பட்டியலில் இடம் பெறச்செய்யும் வகையில் மாநகா் முழுவதும் பல்வேறு இடங்களில் புதிதாக பூங்காக்களை உருவாக்கி நவீன உடற்பயிற்சிக்கூடம் மற்றும் நடைப்பயிற்சி அமைத்தது, மாநகா் முழுவதும் பசுமையை மேம்படுத்த மரக்கன்றுகளையும் நடவு செய்து பராமரிக்க நடவடிக்கை எடுத்தது என்பன உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டாா். இந்நிலையில், அவா் பணியிட மாறுதலில் ஆவடி மாநகராட்சி ஆணையராகச் செல்கிறாா். அவரைத் தொடா்ந்து, வேலூா் மாநகராட்சி ஆணையராக இருந்த எஸ். சிவசுப்பிரமணியன் திருச்சி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா். அதேபோல் ஆவடி மாநகராட்சி ஆணையா் கே. கிருஷ்ண மூா்த்தி வேலூா் ஆணையராக பணி மாறுதலில் செல்கிறாா். இதற்கான உத்தரவை தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.