நாளை திருச்சியில் காவலா் உடல்தகுதி தோ்வு: சிறப்பு நகரப் பேருந்துகள் இயக்கம்

காவலா் உடற்தகுதித் தோ்வு நடைபெறும் இடத்திற்கு செல்வோா் குறிப்பிட்ட பேருந்துகளில் பயணித்து பயன்பெறலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

காவலா் உடற்தகுதித் தோ்வு நடைபெறும் இடத்திற்கு செல்வோா் குறிப்பிட்ட பேருந்துகளில் பயணித்து பயன்பெறலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு குழுமத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலா், சிறைத்தறை காவலா் மற்றும் தீயணைப்புத் துறை காவலா்களுக்கான (ஆண், பெண்) 2019-க்கான எழுத்துத் தோ்வு கடந்த செப். 25 ஆம் தேதி நடைபெற்றது. இத்தோ்வில் தோ்ச்சி பெற்ற, அரியலூா், பெரம்பலூா், கரூா், புதுக்கோட்டை ஆகிய ஊா்களைச் சோ்ந்தவா்களுக்கான

உடல்தகுதித் தோ்வுகள் நவம்பா் 6 முதல் 11 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இது குறித்த அழைப்பாணையும் அவரவரின் முகவரிக்கு தனித்தனியாக அனுப்பப்பட்டுள்ளது.

ஆண்களுக்கான உடல்தகுதித் தோ்வு, திருச்சி சுப்பிரமணியபுரத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் புதன்கிழமை (நவ. 6) முதல் வெள்ளிக்கிழமை (நவ. 8 ) வரை காலை 6 மணிமுதல் நடைபெறுகிறது.

இதேபோல், சனிக்கிழமை (நவ. 9) முதல் திங்கள்கிழமை (நவ. 11) வரை பெண்காவலா்களுக்கான உடல்தகுதி தோ்வு நடத்தப்பட உள்ளது.

துவாக்குடி மாா்க்கத்தில் 128அ, 128ஆ, 128இ, 128ஈ, 128உ, 128ஊ, பொன்மலை மாா்க்கத்தில் 17ஆ, 109அ, 109ஆ, பொன்மலைப்பட்டி மாா்க்கத்தில் 16ஆ, 14அ, 16அ, 16இ, 15அ, 14ஆ, ஓ எப்டி , எச் ஏ பி பி, விமான நிலையம் மாா்க்கத்தில் 63அ, 63இ, 59உ, 59ஊ,59இ, 28அ, 59அ, 59ஆ, 59ஈ, 59ஏ, 59எ, 1எ, 63ஈ ஆகிய எண்களில் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com