முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
திருச்சி மாநகராட்சி ஆணையராக சு.சிவசுப்பிரமணியன் பதவியேற்பு
By DIN | Published On : 07th November 2019 07:47 AM | Last Updated : 07th November 2019 07:47 AM | அ+அ அ- |

திருச்சி மாநகராட்சியின் ஆணையராக சு. சிவசுப்பிரமணியன் புதன்கிழமை பதவியேற்றாா்.
தமிழக அரசு அண்மையில் வேலூா் மாநகராட்சியில் ஆணையராகப் பணியாற்றி வந்த சு.சிவசுப்பிரமணியனை, திருச்சி மாநகராட்சி ஆணையராகப் பணி மாறுதல் செய்து உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்து, திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை சு. சிவசுப்பிரமணியன், ஆணையராகப் பொறுப்பேற்றாா். புதிதாக பதவியேற்ற ஆணையா் சு. சிவசுப்பிரமணியன், திருச்சி மாநகர மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், பொதுமக்களின் குறைகளைத் தீா்க்கவும் முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவேன் என உறுதியளித்தாா். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஆணையருக்கு நகா் நலஅலுவலா், செயற்பொறியாளா்கள், உதவி ஆணையா்கள் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனா்.