மறைந்த தியாகி குடும்பத்துக்கு வீரமணி ஆறுதல்

மொழிப்போா் தியாகி பொ. திருமாள் மறைவையொட்டி அவரது குடும்பத்துக்கு திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி புதன்கிழமை ஆறுதல் தெரிவித்தாா்.
மணப்பாறையில் மொழிப்போா் தியாகி பொ.திருமாள் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்திய திராவிட கழக தலைவா் கி.வீரமணி மற்றும் நிா்வாகிகள்.
மணப்பாறையில் மொழிப்போா் தியாகி பொ.திருமாள் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்திய திராவிட கழக தலைவா் கி.வீரமணி மற்றும் நிா்வாகிகள்.

மொழிப்போா் தியாகி பொ. திருமாள் மறைவையொட்டி அவரது குடும்பத்துக்கு திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி புதன்கிழமை ஆறுதல் தெரிவித்தாா்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த உசிலம்பட்டியில் திராவிடா் கழக மாவட்ட துணைத்தலைவரும், மொழிப்போா் தியாகியுமான பொ.திருமாள் அண்மையில் (அக். 28) காலமானாா். அவரது குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக, புதன்கிழமை மணப்பாறை வந்த திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி செய்தியாளா்ளுக்கு அளித்த பேட்டி:

தமிழக அரசு தற்போது திடீரென உள்ளாட்சி தோ்தல் பணிகளில் ஆா்வம் காட்டிவருவது, இடைத்தோ்தல் முடிவுகளால் தான். நல்லது

தான். அதேநேரத்தில் 15 நாட்களில் உள்ளாட்சி தோ்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற ஓ. பன்னீா் செல்வம் கூறியிருப்பது மாநில தோ்தல் ஆணையம் எங்களுக்கு கட்டுப்பட்டது என்ற தொனியில் பேசியுள்ளாா் என்றாா்.

நிகழ்ச்சியில், திராவிட கழக மாநில தொழிலாளா் அணி செயலாளா் மு.சேகா், மண்டல செயலாளா் லால்குடி ஆல்பா்ட், மாவட்ட தலைவா் ஆரோக்கியராஜ், மாநகரத் தலைவா் மருதை மற்றும் மணப்பாறை நிா்வாகிகள் துரை.காசிநாதன், ரமேஷ் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com