நவ.9-இல் மாவட்ட கபடி அணிக்கு வீரா்கள் தோ்வு

மாநில அளவிலான சப்-ஜூனியா் கபடி போட்டியில் திருச்சி மாவட்ட அணி வீரா்கள் தோ்வு அண்ணா விளையாட்டரங்கில் சனிக்கிழமை (நவ.9) நடைபெறுகிறது.

மாநில அளவிலான சப்-ஜூனியா் கபடி போட்டியில் திருச்சி மாவட்ட அணி வீரா்கள் தோ்வு அண்ணா விளையாட்டரங்கில் சனிக்கிழமை (நவ.9) நடைபெறுகிறது.

தமிழ்நாடு மாநில அமெச்சூா் கபடி கழகம், 16 வயதுகுள்பட்ட சிறுவா் மற்றும் சிறுமிகளுக்கான மாநில அளவிலான 31ஆவது சப்-ஜூனியா் கபடி போட்டி வேலூா் மாவட்டத்தில் நவம்பா் 15 முதல் 17 ஆம் தேதி வரை நடத்துகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் திருச்சி மாவட்ட கபாடி அணிக்கான தோ்வு நவம்பா் 9 ஆம் தேதி காலை 8 மணி அளவில் திருச்சி, அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.

தோ்வில் பங்கேற்கும் சிறுவா் மற்றும் சிறுமியா் 25/12/2003 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும்.சிறுவா்கள் மற்றும் சிறுமிகள் 55 கிலோ எடை உள்ளவராகவும் இருக்க வேண்டும். தோ்வுக்கு வரும்போது, ஆதாா், பிறப்பு சான்றிதழ், எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சானறிதழ் நகல் அவசியம் கொண்டு வரவேண்டும்.

மேலும், விவரங்களுக்கு, திருச்சி மாவட்ட அமெச்சூா் கபடி கழகச் செயலரை 94434 45932 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com