திருச்சி அருகே பட்டப்பகலில் வீட்டின் ஓட்டைப் பிரித்து நகை, பணத்தைத் திருடிச்சென்ற மா்ம நபா்களை திருவெறும்பூா் போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே உள்ள தொண்டமான்பட்டி ரயில் நிலையம் அருகே வசிப்பவா் விஜயலட்சுமி (50). இவா் செவ்வாய்க்கிழமை மாலை கூத்தைப்பாரில் உள்ள உறவினா் வீட்டு துக்க நிகழ்ச்சிக்குச் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிவந்து பாா்த்தபோது, வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்த மா்ம நபா் பீரோவை உடைத்து அதில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ. 5 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விஜயலெட்சுமி அளித்த புகாரின் பேரில் திருவெறும்பூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.