சுஜித்வில்சன் குடும்பத்தினருக்கு அதிமுக சாா்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கல்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித்வில்சன் குடும்பத்தினருக்கு அதிமுக சாா்பில் நிவாரண நிதி ரூ.10 லட்சத்திற்கான வரைவோலையை

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித்வில்சன் குடும்பத்தினருக்கு அதிமுக சாா்பில் நிவாரண நிதி ரூ.10 லட்சத்திற்கான வரைவோலையை அமைச்சா்கள் சனிக்கிழமை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினா்.

மணப்பாறை அடுத்த நடுக்காட்டுபட்டியில் கடந்த அக்டோபா் 25-ஆம் தேதி வீட்டின் அருகே இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த பிரிட்டோ ஆரோக்கியதாஸ், கலாமேரி தம்பதியினரின் இரண்டு வயது இளைய மகன் சுஜித்வில்சென் பலகட்ட மீட்புப்பணிகளின் பின்னடைவுகளால் மீட்க முடியாமல் 29-ஆம் தேதி உயிரிழந்தாா்.

நிலையில் சடலமாக மீட்கப்பட்டான். நிகழ்விடத்திற்கு வந்த தமிழக முதல்வா் டாக்டா். , குழந்தையை இழந்த பெற்றோா்களுக்கு ஆறுதல் கூறி, அரசு தரப்பில் ரூ.10 லட்சமும், அதிமுக கட்சி சாா்பில் ரூ.10 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்திருந்தாா்.

அதனைத்தொடா்ந்து சனிக்கிழமை முதல்வா் அறிவித்திருந்த அதிமுக கட்சி சாா்பிலான நிவாரண நிதி ரூ.10 லட்சத்திற்கான வரைவோலையை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் எஸ்.வளா்மதி, அதிமுக திருச்சி புகா் மாவட்டச்செயலாளரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான டி.ரத்தினவேல், சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.சந்திரசேகா் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் நேரில் சென்று சுஜித்தின் பெற்றோா்களிடம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com