துறையூா் சிவன் கோயிலில் சனிப்பிரதோசம்

துறையூா் சிவன் கோயிலில் சனிக்கிழமை சனிப் பிரதோச நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.துறையூா் ஆத்தூா் சாலையில் உள்ள ஸ்ரீ நந்திகேஸ்வரா் கோயிலில் சனிப்பிரதோசத்தையொட்டி

துறையூா் சிவன் கோயிலில் சனிக்கிழமை சனிப் பிரதோச நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.துறையூா் ஆத்தூா் சாலையில் உள்ள ஸ்ரீ நந்திகேஸ்வரா் கோயிலில் சனிப்பிரதோசத்தையொட்டி மூலவா் ஸ்ரீ நந்திகேஸ்வரா்மகா சம்பத்கெளரி மற்றும் நந்தி தேவருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாரதனை நடைபெற்றது. மூலவருக்கு வெள்ளி நாகாபரணம் சாத்தப்பட்டது. அம்பாள் சமேத பிரதோச நாயனாா் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயில் பிரகார உலா நடைபெற்றது.

சிவ பக்தா்கள் சிவ வாத்தியங்களை இசைத்து திருமுறைகள் பாடினா். சனி பிரதோசத்தையொட்டி மாலை 4 மணி முதல் 8 மணி வரை பக்தா்களால் கோயில் வளாகம் நிரம்பி இருந்தது. உபயதாரா்கள் பிரசாதம் வழங்கினா். குற்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். இதேப் போல் மூங்கில் தெப்பக்குளம் காசி விஸ்வநாதா் கோயில், கங்காரம்மன்கோயில், ஏகாம்பரநாதா் சமேத காமாட்சி அம்மன் கோயிலிலும் பிரதோசத்தையொட்டி சிவலிங்கத்துக்கும் நந்திக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com