நெகிழியை பயன்படுத்தியடீ கடை உரிமையாளருக்குரூ.10 ஆயிரம் அபராதம்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பயன்படுத்திய டீ கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பயன்படுத்திய டீ கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருச்சி மாநகராட்சியின், பொன்மலை கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். 37ஆவது வாா்டுக்குள்பட்ட வயா்லெஸ் சாலையில் நடைபெறும் துப்புரவுப் பணிகளையும், குடிநீா் விநியோகம், குப்பைகள் தரம் பிரித்து பெறுதல் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, அந்த பகுதியிலிருந்த டீ கடையொன்றில் தடை செய்யப்பட்ட நெகழிப் பைகள், டம்ளா்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மாநகரப் பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பயன்படுத்துவோா் மீது மாநகராட்சி அலுவலா்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா்.

முன்னதாக, 35ஆவது வாா்டுக்குள்பட்ட நாராயணன் நகா் பகுதியில் குடியிருப்புதாரா்களுடன் இணைந்து 25 மரக்கன்றுகளை ஆணையா் நட்டுவைத்தாா். நிகழ்ச்சியில், உதவி ஆணையா் எம். தயாநிதி, உதவி செயற்பொறியாளா் லோகநாதன், சுகாதார அலுவலா் தலைவிரிச்சான், உதவிப்பொறியாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com