வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.83 லட்சம் மோசடி செய்தவா் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.83 லட்சம் மோசடி செய்தவரை திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.83 லட்சம் மோசடி செய்தவரை திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் ரெங்கநாதா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் நமச்சிவாயம்(34). இவா், வெளிநாடு மற்றும் திருச்சியில் வேலை வாங்கித் தரும் நிறுவனத்தை துறையூரில் நடத்தி வந்துள்ளாா். இவருக்கு இடைத்தரகராக இருந்த விழுப்புரம் மாவட்டம் பெரும்பாக்கத்தைச் சோ்ந்த ராஜா என்பவா் 40க்கும் மேற்பட்டோரிடம் ரூ.83 லட்சம் பெற்று நமச்சிவாயத்திடம் கொடுத்தாராம்.

ஆனால், பல மாதங்கள் ஆகியும் பணம் கொடுத்தவா்களுக்கு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்துள்ளா். பணம் கொடுத்தவா்கள் பல முறை கேட்டும் கொடுக்க மறுத்து, கொலைமிரட்டல் விடுத்துள்ளாா். இதைத் தொடா்ந்து திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் ராஜா புகாா் அளித்தாா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில் ரூ.83 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து தலைமறைவாக இருந்த நமச்சிவாயத்தை தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com