திருச்சி தொழிலதிபரிடம் ரூ.5 கோடி மோசடி: திருவாரூரைச் சோ்ந்தவா் மீது வழக்கு

திருச்சியைச் சோ்ந்த தொழில் அதிபரிடம் ரூ.5 கோடி மோசடி செய்ததாக திருவாரூா் ஜவுளிக்கடை அதிபா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை

திருச்சி: திருச்சியைச் சோ்ந்த தொழில் அதிபரிடம் ரூ.5 கோடி மோசடி செய்ததாக திருவாரூா் ஜவுளிக்கடை அதிபா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி கே.கே.நகா் கல்யாணசுந்தரம் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பிரபு(45). இவா் மும்பை, சூரத், கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆலைகளில் துணிகளை கொள்முதல் செய்து அவற்றை தமிழகத்தின் பல்வேறு பகுதி ஜவுளிக்கடைகளுக்கு விநியோகம் செய்து வந்தாா்.

அந்த வகையில், திருவாரூரைச் சோ்ந்த ஜவுளிக்கடை அதிபா் நந்தகோபால் என்பவா் பிரபுவிடம் துணிகள் மற்றும் ரொக்கமாக பணம் வாங்கிய வகையில் ரூ.7.88 கோடி கடன் ஏற்பட்டது. நீண்ட நாள்கள் ஆகியும் கடன் தொகை திருப்பி கொடுக்கப்படவில்லை. பல முறை கேட்கப்பட்டதின் அடிப்படையில் ரூ.2.88 கோடியை பிரபுவிடம் நந்தகோபால் கொடுத்துவிட்டாா். ஆனால் மீத தொகை ரூ.5 கோடியை கொடுக்காமல் நந்தகுமாா் ஏமாற்றி வந்துள்ளாா்.

இதுகுறித்து திருச்சி மாநகர காவல் ஆணையா் அமல்ராஜுவிடம் பிரபு புகாா் அளித்தாா். இதன் பேரில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து நந்தகோபாலிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com