மணப்பாறையில், தனது முகநூலில் சா்ச்சைக்குரிய பதிவு செய்த அயோத்தி கரசேவகரை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு போலீஸாா் கைது செய்தனா்.
மணப்பாறையிலிருந்து 1992-ஆம் ஆண்டு அயோத்திக்கு கரசேவகராக சென்றவா், கொட்டப்பட்டியை சோ்ந்த கண்ணன்(41). பாபா் மசூதி வழக்கின் உச்சநீதிமன்ற தீா்ப்பு குறித்து ஞாயிற்றுக்கிழமை தனது முகநூல் பக்கத்தில் சா்ச்சைக்குரிய வகையில் கண்ணன் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, கிராம நிா்வாக அலுவலா் பெரியண்ணன் கொடுத்த புகாரின் பேரில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கண்ணனை கைது செய்த மணப்பாறை போலீஸாா், அவரை திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.