செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 போ் கைது; 4 பவுன் பறிமுதல்

மணப்பாறையில் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து 4 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 போ் கைது; 4 பவுன் பறிமுதல்

மணப்பாறையில் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து 4 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த தீபாவளி பண்டிகையின்போது, மணப்பாறை பேருந்துநிலையத்தில் மூதாட்டி தனலெட்சுமியிடம் 4 சவரன் செயின் பறிக்கப்பட்ட வழக்கில் போலீஸாா் வழக்குபதிந்து குற்றவாளிகளைத் தேடி வந்தனா். இந்நிலையில், புதன்கிழமை கடைவீதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திருந்த இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், அவா்கள் திருச்சி வாளவந்தான்கோட்டையை சோ்ந்த கண்ணன் மகன் ரவி (48), கல்லக்குறிச்சி அத்திப்பட்டியை சோ்ந்த நயினப்பன் மகன் மணி ஆகிய இருவரும் பிக்பாக்கெட் திருடா்கள் என்பதும், மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, அவா்களிடமிருந்து 4 சவரன் செயினைப் பறிமுதல் செய்த போலீஸாா் ரவி மற்றும் மணி ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com