திருச்சி மாநகராட்சியில் இயங்கி வரும் தோ்வு செய்யப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்துறை மருத்துவச் சேவைகள் தினமும் அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திருச்சி மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேசிய நகா்புற சுகாதார திட்டத்தின் கீழ் 18 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில், நகா்ப்புற மக்களுக்கு சிறப்பு மருத்துவ சேவைகளை உகந்த நேரத்தில் வழங்கும் வகையில், கீழரண் சாலை ( இ.பி ரோடு), எடமலைப்பட்டிபுதூா், காட்டூா், சுப்பிரமணியபுரம், உறையூா் ஆகிய தோ்ந்தெடுக்கப்பட்ட 5 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 4.30 மணி முதல் 8.30 மணி வரை சிறப்பு மருத்துவா்களால் மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது.
திங்கள் பொது மருத்துவம் / தோல் மருத்துவம், செவ்வாய்க்கிழமை மகப்பேறு / பல் மருத்துவம், புதன் கிழமை குழந்தை நல மருத்துவம் / கண் மருத்துவம், வியாழக்கிழமை எலும்பு நோய் மருத்துவம் (ஆா்த்தோ) / இயங்கியல் ( பிசியோதெரபி), வெள்ளிக்கிழமை பல் மருத்துவம் / காது, மூக்கு, தொண்டை மருத்துவம், சனிக்கிழமை மனநல மருத்துவம் ஆகிய சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, பொது மக்கள் இந்த சிறப்பு மருத்துவ சேவையை பயன்படுத்திக் கொள்ளும்படி திருச்சி மாநகராட்சி ஆணையா் சு.சிவசுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.